உலகம்செய்திகள்

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

Share

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் முக்கியமான நாடு எகிப்து. ஆனால் தற்போது உணவு பண்டங்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது மேற்கத்திய நாடுகளின் கொள்கை தவறுகளின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள புடின்,

உக்ரைனுடனான போருக்கு முந்தையது இந்த விவகாரம் என்றார். உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ரஷ்யா தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் தானிய கிடங்குகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுவீசி ஆயிரக்கணக்கான டன் தானியங்களை அழித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட வழிவகுத்தது.

இதனால் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கிக்கொண்டது. இது உலகமெங்கும் உணவு விலைகளை உயர்த்தியது, மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...