2 scaled
உலகம்செய்திகள்

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

Share

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக உக்ரைனை விட்டு வெளியேறிய முடிவு செய்துள்ளார்.

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்தித்து உரையாட திட்டமிட்டு இருந்தார், இதையடுத்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்கவும் முடிவு செய்து இருந்தார்.

ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஆர்பன் ரஷ்ய ஜனாதிபதி புடினை பாராட்டி பேசியதோடு, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு தனது ஆதரவை ஹங்கேரி வழங்க மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறிய முயன்றதால் அவர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டார் என உக்ரைன் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற அனுமதி தனக்கு இருந்தும் என்னை அவர்கள் திருப்பி அனுப்பியது ஒற்றுமை மீதான தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ராணுவ சட்டத்தின் படி, 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...