23 64fd4b277a8b2 md
உலகம்செய்திகள்

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

Share

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டேனியல் காலிஃபைக் லண்டன் சிறையில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் ஓடலாம் என்ற கணிப்பில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடைபெற்றது.

பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளத்தின் அருகே நடைபெற்ற இரண்டு சம்பவங்களின் தொடர்பில் டேனியல் காலிஃபைக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லண்டன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி டேனியல் காலிஃபைக்-ஐ  சனிக்கிழமையான நேற்று காலை 11 மணியளவில் சிஸ்விக் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
டேனியல் காலிஃபைக் தப்பிச் சென்ற போது சிறைச்சாலையின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்றும், உணவு டெலிவரி வேனின் அடிப்பகுதியில் தொற்றிக் கொண்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் டேனியல் காலிஃபைக் தொடர்பான வழக்கு வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நவம்பர் 13ம் திகதி தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...