23 64fd4b277a8b2 md
உலகம்செய்திகள்

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

Share

தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்

லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டேனியல் காலிஃபைக் லண்டன் சிறையில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் ஓடலாம் என்ற கணிப்பில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடைபெற்றது.

பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளத்தின் அருகே நடைபெற்ற இரண்டு சம்பவங்களின் தொடர்பில் டேனியல் காலிஃபைக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லண்டன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி டேனியல் காலிஃபைக்-ஐ  சனிக்கிழமையான நேற்று காலை 11 மணியளவில் சிஸ்விக் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
டேனியல் காலிஃபைக் தப்பிச் சென்ற போது சிறைச்சாலையின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்றும், உணவு டெலிவரி வேனின் அடிப்பகுதியில் தொற்றிக் கொண்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் டேனியல் காலிஃபைக் தொடர்பான வழக்கு வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நவம்பர் 13ம் திகதி தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...