8
உலகம்செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் பிரித்தானியா புதிய கட்டுபாட்டு நடவடிக்கை

Share

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் பிரித்தானியா புதிய கட்டுபாட்டு நடவடிக்கை.

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் திறனை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள புலம்பெயர்வு நிலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் (Home Office) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள புலம்பெயர்தல் ஆலோசனை குழு (Migration Advisory Committee-MAC) முக்கியத் துறைகளின் திறனின்மைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அமைச்சர்களுக்கு சிபாரிசு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீசா முதலீட்டாளர்களின் ஆவணங்களைச் சோதிக்கும் பணி தீவிரமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றை அடிப்படியாக கொண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் நிறுவனங்களின் அனுமதிகள் இடைநீக்கம் அல்லது இரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்த ஜப்பான் உதவி: 8 நவீன பேருந்துகள் நன்கொடை!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 8 தாழ்தளப்...

12 3
செய்திகள்இலங்கை

காலி கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிப்பு: கடல்சார் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப்...

10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...