உலகம்செய்திகள்

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

Share
23 656e4a11376fa
Share

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது.

புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள்
வடக்கு லண்டனின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் உள்ள எகெர்டன் சாலையில் உள்ள நிறுத்தத்தில் பேருந்திற்காக சில யூத பள்ளி சிறுவர்கள் காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

சிறுவர்கள் பேருந்தை நிறுத்துவதற்கான சிக்னலை காட்டிய பிறகு, முதலில் பேருந்து தனது வேகத்தை குறைத்து அருகில் சென்றுள்ளது.

ஆனால் அருகில் சென்று உடன் அவர்கள் யூத குழந்தைகள் என தெரிந்து பேருந்தை நிறுத்தாமல் பேருந்து சாரதி ஓட்டிச் சென்றுள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் இந்த செயலை பேருந்திற்குள் இருந்த சில பயணிகள் உற்சாகம் வழங்கியதோடு, பேருந்தை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு பாரட்டையும் சில யூத எதிர்ப்பு கருத்து கொண்ட பயணிகள் சாரதிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நவம்பர் 26ம் திகதி வாட்டர்லூ நோக்கி சென்ற 76 பேருந்தில் காலை 8.05 மணியளவில் நடந்துள்ளது.

இந்த மோசமான அச்சுறுத்தல், அதிர்ச்சி சம்பவத்தை பேருந்துக்குள் இருந்த யூத பயணி ஒருவர் ஷோம்ரிம் – யூத சமூக பாதுகாப்பு மற்றும் மெட் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு பிறகு, அதே போன்று ஹாக்னியில் உள்ள ராவன்ஸ்டேல் சாலையில் 318 பேருந்தில் இரவு 7.40 மணியளவில் நடந்துள்ளது.

இதில், யூத சிறுவன் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்காக சிக்னலை செய்த பிறகு, முதலில் பேருந்தை நிதானப்படுத்தி மெல்ல அருகில் சென்ற சாரதி நிற்பது யூத சிறுவனின் என அறிந்த பிறகு பேருந்தை நிறுத்தாமல் விரைவாக எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் அதற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை அந்த சாரதி ஏற்றிக் கொண்டார். என பேருந்தில் பயணம் செய்த யூத சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூத எதிர்ப்பு நடவடிக்கையானது அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு பிறகு அதிகரித்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...