20 20
உலகம்செய்திகள்

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மில்லியனர்கள்

Share

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மில்லியனர்கள்

லேபர் கட்சியின் ஆட்சியில் பிரித்தானியாவை விட்டு மில்லியனர்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் கட்சியின் வரி திட்டங்களால் மில்லியனர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் எண்ணிக்கை சாதாரணத்தை விட அதிகரித்துள்ளது.

New World Health நிறுவனத்தின் தகவல்படி, கடந்த ஆண்டு பிரித்தானியா 10,800 மில்லியனர்களை இழந்துள்ளது.

இது 2023-இன் எண்ணிக்கையிலிருந்து 157% அதிகரிப்பை காட்டுகிறது.

இதனால், சீனாவிற்கு பிறகு உலகின் மிகுந்த மில்லியனர்களை இழந்த நாடாக பிரித்தானியா ஆனது.

மில்லியனர்கள் முக்கியமாக இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த சூழலில், Rankin Brothers & Sons போன்ற 250 ஆண்டுகள் பழமையான குடும்ப தொழில்முனைவுகள் கூட வரி திட்டங்களால் பாதிக்கப்படுகின்றன.

2026 முதல், 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்பை மீறும் குடும்ப நிறுவனங்கள் 20% மரபாண்மை வரி செலுத்த வேண்டியுள்ளது, இது பெரிய சவாலாகும்.

மேலும், ஹோட்டல் வரி உள்ளிட்ட திட்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் செலவை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. லேபர் கட்சியின் வரி திட்டங்கள் வளர்ச்சியை தடுக்கின்றன என தொழில்முனைவாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...