24 66865256b79a9
உலகம்செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

Share

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

பிரித்தானிய(uk) நாடாளுமன்றத் தேர்தல் இன்று (4) நடைபெறுகின்ற நிலையில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நேரம், இரவு 10.00 மணியுடன் முடிவு பெறும்.

இதன் பின்னர், தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் முடிவும் வெளியாகும்.

இந்த கருத்துக்கணிப்புகள் பொதுவாகவே, சரியாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. 2019இல், போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என மக்கள் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்திருந்தன.

இரவு 10.00 மணி வாக்களிப்பு முடியும் அதேவேளை, 11.00 மணியளவில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களை சென்றடையும். இரவு 11.30 முதல் 12.15 மணி வரை யார் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது என்னும் போட்டி ஆரம்பமாகும்.

கடந்தமுறை, Newcastle upon Tyne Central தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முதலில், (11.27 )மணிக்கு வெளியாகின.

2017இலும் இந்த தொகுதியில்தான் முதன்முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. அதிகாலை 12.30 முதல் 3.00 மணி வரை சுமார் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும்.

3.00 மணிக்கு மேல், எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றியது, எத்தனை இடங்களை இழந்தது என்ற விவரங்களும் வெளியாகும்.

இதேவேளை, தொழிற் கட்சி(Labour Party) பெரும்பாலான இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு(Conservative Party) பெரிய இழப்பு ஏற்படும் என்றும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...