24 66865256b79a9
உலகம்செய்திகள்

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

Share

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நேரம்

பிரித்தானிய(uk) நாடாளுமன்றத் தேர்தல் இன்று (4) நடைபெறுகின்ற நிலையில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நேரம், இரவு 10.00 மணியுடன் முடிவு பெறும்.

இதன் பின்னர், தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் முடிவும் வெளியாகும்.

இந்த கருத்துக்கணிப்புகள் பொதுவாகவே, சரியாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. 2019இல், போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என மக்கள் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்திருந்தன.

இரவு 10.00 மணி வாக்களிப்பு முடியும் அதேவேளை, 11.00 மணியளவில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களை சென்றடையும். இரவு 11.30 முதல் 12.15 மணி வரை யார் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது என்னும் போட்டி ஆரம்பமாகும்.

கடந்தமுறை, Newcastle upon Tyne Central தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முதலில், (11.27 )மணிக்கு வெளியாகின.

2017இலும் இந்த தொகுதியில்தான் முதன்முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. அதிகாலை 12.30 முதல் 3.00 மணி வரை சுமார் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும்.

3.00 மணிக்கு மேல், எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றியது, எத்தனை இடங்களை இழந்தது என்ற விவரங்களும் வெளியாகும்.

இதேவேளை, தொழிற் கட்சி(Labour Party) பெரும்பாலான இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு(Conservative Party) பெரிய இழப்பு ஏற்படும் என்றும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...