16 20
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

Share

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு : ஜேர்மனிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி தடை

ஜேர்மனியில் (Germany) கோமாரி நோய் (Foot-and-Mouth) கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா (Britain) தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இந்த நோய் கண்டறியப்படாதாலும், தடுப்பு நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் இது நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோமாரி நோய் என்பது மாடுகள், பன்றிகள், ஆடுகள், மீன்கள் மற்றும் இரட்டைச் சொறி கால்களைக் கொண்ட கால்நடைகளில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாகும்.

இது மனிதர்களுக்கு எந்தவித சுகாதார அபாயத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 2001 இல் பிரித்தானியாவில் ஏற்பட்ட பெரும் பரவல் ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட கால்நடைகளை கொல்ல வழிவகுத்துடன் இது விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது, ஜேர்மனி பன்றி இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை சந்தித்து வருகின்றது. பிரித்தானியாவிற்கு ஜேர்மனி மூன்றாவது பெரிய பன்றிக் கறி ஏற்றுமதியாளராகவும் இரண்டாவது பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ள நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை, ஜேர்மனிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...