8 49
உலகம்செய்திகள்

ரஷ்ய இரகசியங்களை அமெரிக்காவிற்கு கைமாற்றிய நபருக்கு நேர்ந்த கதி!

Share

ரஷ்ய இரகசியங்களை அமெரிக்காவிற்கு கைமாற்றிய நபருக்கு நேர்ந்த கதி!

உளவு பார்த்ததாக அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு மொஸ்கோ நீதிமன்றம் மொத்தம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யூஜின் ஸ்பெக்டர் என்ற சந்தேகநபர் ரஷ்யாவின் உயிரித் தொழில்நுட்ப இரகசியங்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் பிறந்து பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஸ்பெக்டருக்கு உளவு பார்த்ததற்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், ஏற்கனவே குறித்த நபருக்கு இருந்த லஞ்ச ஊழல் தண்டனையுடன் சேர்க்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை 15 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர், ரஷ்ய மக்கள்தொகையின் அதிவேக மரபணுத் திரையிடல் அமைப்பை அமெரிக்காவில் உருவாக்குவதற்காக, மாநில இரகசியங்களை உள்ளடக்கிய உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் மருத்துவ தலைப்புகளில் பல்வேறு தகவல்களை சேகரித்து வெளிநாட்டுத் தரப்புக்கு மாற்றியுள்ளதாக FSB மேலும் தெரிவித்துள்ளது.

முந்தைய வழக்கில் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஸ்பெக்டர் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவன குழுவொன்றின் தலைவராக பணியாற்றியுள்ளதாகவும் ரஷ்யா மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...