உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Share
8 29
Share

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அமெரிக்க குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தொடங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்து நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக புதிய குடிவரவு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று குடியரசு கட்சி கூறுகிறது.

ஜூன் மாதம் அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 500,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டு புலம்பெயர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 17 நிலவரப்படி, அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற பெற்றோருடன் வசிக்கும் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...