மக்கா யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு
மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Leave a comment