tamilni 257 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

Share

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று (20.10.2023) பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது மகள் என கூறியுள்ளது.

மேலும், இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை விடுதலை செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...