tamilni 257 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

Share

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று (20.10.2023) பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது மகள் என கூறியுள்ளது.

மேலும், இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை விடுதலை செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...