உலகம்செய்திகள்

துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை

Share
9 2
Share

துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை

இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

காசாவில் இராணுவ நடவடிக்கையை நடத்திய பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தான் தாக்குதல் நடத்தலாம் என்று எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

அப்போது ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் பல தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இஸ்ரேலின் இந்த தீவிர போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு ஈரான் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் சில ஏவுகணைகளை தடுத்து இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தவறிழைத்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதம் ஏற்கனவே நமது வாசலில் உள்ளது, தற்போது நாம் எதிர்கொள்வது சட்டத்திற்கு கட்டுப்பட்ட நாட்டை அல்ல, இரத்தத்தை உண்ணும் கொலையாளி குழுவுக்கே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...