rtjy 22 scaled
உலகம்செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

Share

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும் எனவும் துருக்கி ஜனாதிபதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் போர், 2 மாதங்களை எட்டவுள்ளது.

இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலை கண்டிக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன், இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகுவின் செயல், அவரது அரசுக்கு மட்டுமின்றி அவரை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கரும் புள்ளியாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்களின் இந்த மௌனத்திற்கு வரும் காலங்களில் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுமார் 2,000க்கும் மேற்பட்ட துருக்கி வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், காசா பகுதியில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆரம்பம் முதலே துருக்கி ஜனாதிபதி இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது துருக்கியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...