24 66a340120f652
உலகம்

இளவரசர் வில்லியமுடைய இன்னொரு முகம்: இளவரசி டயானாவின் கடிதத்திலிருந்து தெரியவந்த உண்மை

Share

இளவரசர் வில்லியமுடைய இன்னொரு முகம்: இளவரசி டயானாவின் கடிதத்திலிருந்து தெரியவந்த உண்மை

இளவசர் வில்லியமும் ஹரியும் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கும் புகைப்படங்கள்தான் இப்போது அதிகம் வெளிவருகின்றன.

ஆனால், அவர்கள் எப்போதுமே இப்படி முட்டிக்கொண்டிருந்ததில்லை என்பதற்கு ஆதாரமாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின் பெற்றோர் வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர் வயலட் (Violet “Collie” Collison) என்னும் பெண்மணி.

வயலட்டுக்கு இளவரசி டயானா பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவற்றில் சில தற்போது ஏலம் விடப்பட உள்ளன.

அந்தக் கடிதங்களில் ஒன்றில், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரியின் சிறு வயது குறித்த சில விடயங்களை எழுதியுள்ளார் டயானா.

1984ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி டயானா வயலட்டுக்கு எழுதிய கடிதத்தில், வில்லியம் தன் தம்பி ஹரி மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார். எப்போது பார்த்தாலும், தம்பியைக் கட்டிப்பிடித்துக்கொள்வதும் முத்தமிடுவதுமாக தன் நேரம் முழுவதையுமே ஹரியுடன்தான் செலவிடுகிறார் வில்லியம் என்று குறிப்பிட்டுள்ளார் டயானா.

ஆக, சிறு வயதில் அண்ணனும் தம்பியும் எவ்வளவு பாசமாக இருந்துள்ளார்கள் என்பது இந்தக் கடிதத்திலிருந்து தெரியவருகிறது.

அது மட்டுமல்ல, ஹரி, மேகனை திருமணம் செய்வதற்கு முன்பு கூட, இளவரசர் வில்லியம், இளவரசி கேட், இளவரசர் ஹரி ஆகிய மூவரும் எங்கேயென்றாலும் சேர்ந்தேதான் சுற்றுவார்கள்.

ராஜ குடும்பத்தின் மும்மூர்த்திகள் என்றே ஊடகங்கள் அவர்களைக் குறிப்பிட்ட காலகட்டத்தை நிச்சயம் மறக்கமுடியாது!

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...

images 6 3
உலகம்செய்திகள்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச்...