16 5
உலகம்

உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா..! ட்ரம்பின் முடிவை வரவேற்கும் ரஷ்யா

Share

உக்ரைனை(ukraine) நேட்டோவில்(nato) சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) முடிவுக்கு ரஷ்யா(russia) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை கடந்து நடந்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன்(joe biden) தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது ரஷ்யாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கும் முன்னாள் ஜனாதிபதி பைடனின் முடிவை, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் கைவிட்டு விட்டார்.

அதாவது, நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் பைடன் அமெரிக்காவின் நிலையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி பைடனின் நிர்வாகம் எடுத்த முடிவுகள் குறித்து ட்ரம்ப் முதல் முறையாக பேசியுள்ளார். உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் விருப்பத்திற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்’ எனக் கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 47
செய்திகள்உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்: உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

பிரித்தானிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி (Labour) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆகிய இரு...

world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...