tamilni 239 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனின் ஆட்டம் டொனால்டு ட்ரம்பால் முடிவுக்கு வரும்

Share

உக்ரைனின் ஆட்டம் டொனால்டு ட்ரம்பால் முடிவுக்கு வரும்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவானால், உக்ரைனுக்கு போர் தொடர்பில் நிதியுதவிகள் மொத்தமாக நிறுத்தப்படும் என்று ஹங்கேரி பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய – உக்ரைன் போர் முடிவு வரும் என்றும் ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்தித்த பின்னர் Viktor Orban குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை புளோரிடாவில் தமது நீண்ட கால நண்பரை சந்தித்த Viktor Orban உக்ரைன் விவகாரத்தில் தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார். ட்ரம்புடனான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களை எதிர்கொண்ட Viktor Orban,

உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு பைசா கூட ட்ரம்ப் கொடுக்க மாட்டார், எனவே போர் முடிவுக்கு வரும். உக்ரைனால் டஹ்ற்போது பாரிய தொகையை போருக்கு என்று செலவிட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே என்றார்.

அமெரிக்க நிர்வாகம் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுக்கவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளும் மறுத்துவிட்டால், பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்.

அமெரிக்க நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளாலும் இந்த போருக்கு சொந்தமாக நிதியளிக்க முடியாத சூழல் உருவானால், பின்னர் போர் முடிவுக்கு வரும் என்பது உறுதி என்றார் Viktor Orban.

கடந்த 2022ல் ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து Viktor Orban உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்து வருவதுடன், ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

ரஷ்யாவை தனிமைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்த போதிலும் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் சந்தித்தார் Viktor Orban.

ஏற்கனவே ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு ஐரோப்பிய தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது என்பதுடன், அது உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளை சிக்கலில் தள்ளும் என்றும் அஞ்சுகின்றனர்.

 

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...