7 55
உலகம்செய்திகள்

வலுக்கும் ட்ரம்பின் நாடுகடத்தல் அச்சுறுத்தல்கள்!

Share

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு வாரத்திற்குள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றத்திற்கு எதிரான தனது அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தலை மேற்கொள்வதாக தனது பிரசார வாக்குறுதியை அவர் தற்போது வலுப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 20 அன்று ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க நடைமுறையாக்க (ICE) அமெரிக்கா முழுவதும் 3,500 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத குடியேறிகளை கைது செய்துள்ளது.

இந்நிலையில் அவரது நிர்வாகம் நாடுகடத்தல் விமானங்களையும் அனுப்பத் தொடங்கியுள்ளன.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் மெக்சிகோவிலிருந்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக தனது பதவியேற்பு நாளில், மெக்சிகோவுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்க தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிக்கும் நிர்வாக நடவடிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இதன்படி அமெரிக்க இராணுவம் தெற்கு எல்லைக்கு 1,500 உள்ள துருப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில், சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களை “பயங்கரவாத அமைப்புகள்” என்று நியமிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக மெக்சிகோவைக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் கொலம்பியாவிலிருந்து 190,000 அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்ததாக பியூ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நாடுகடத்தப்படும் விமானங்கள் தொடர்பான பிரச்சினையில் கொலம்பியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வார இறுதியில் ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நாடுகடத்தப்பட்ட கொலம்பிய குடிமக்களால் நிரப்பப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ தனது நாட்டில் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபோது இது தொடங்கியது.

இதன்படி ட்ரம்ப் நிர்வாகம் குடியேறிகளை மரியாதையுடன் நடத்தவில்லை என்று பெட்ரோ கூறியுள்ளார்.

கொலம்பிய பொருட்கள் மீதான வரிகளையும் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகளையும் ட்ரம்ப் அச்சுறுத்தியதால், மோதல் விரைவாக அதிகரித்தது.

இதன்படி அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிப்பதாக பெட்ரோ கூறினார்.

மேலும், கொலம்பிய வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ முரில்லோ ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அதிகாரிகள் இந்த முட்டுக்கட்டையைச் சமாளித்து அமெரிக்கா அனுப்பிய நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், கொலம்பியாவின் ஜனாதிபதி விமானத்தை கொலம்பியர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவுவதற்காக நிறுத்துவார் என்றும் அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து 725,000 அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் இருந்தாக தெரியவந்துள்ளது.

இது பியூ மதிப்பீடுகளின்படி, மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு மூன்றாவது அதிக எண்ணிக்கையாகும்.

ட்ரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திங்களன்று தொலைபேசியில் பேசி, குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக, புளோரிடாவில் உள்ள ஹவுஸ் குடியரசுக் கட்சியினருக்கு உரையாற்றிய போது அவர்,  அதே நாளில் கூறினார்.

மேலும், சட்டவிரோத குடியேற்றம் குறித்து இந்தியா “சரியானதைச் செய்யும்” என்றும், பெப்ரவரியில் மோடி அமெரிக்காவிற்கு வருவார் என்றும் கூறினார்.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சீனாவிலிருந்து அங்கீகரிக்கப்படாத குடியேறிகள் 375,000 பேர் இருந்ததாக பியூ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அந்த எண்ணிக்கையில் ஹாங்காங் மற்றும் தைவானில் இருந்து குடியேறியவர்களும் அடங்குவர்.

சீனா திங்களன்று பிரதான நிலப்பகுதியிலிருந்து நாடுகடத்தப்படுபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகக் கூறியது.

திருப்பி அனுப்புதல் தொடர்பாக, முதலில் சரிபார்த்து பின்னர் திருப்பி அனுப்புவதே சீனாவின் கொள்கை என சுட்டிக்காட்டியது.

மேலும், சீன நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என சரிபார்க்கப்பட்ட சீன குடிமக்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம், என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன்படி சீனாவின் பிரதான நிலப்பகுதி ஹாங்காங், மக்காவ் மற்றும் தாய்வானை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...