17 12
உலகம்செய்திகள்

இராணுவம் இறங்கும்… தேசிய அவசரநிலை: டொனால்டு ட்ரம்பின் அதிரவைக்கும் திட்டம்

Share

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் மொத்தம் 100 சிறப்பு நிர்வாக ஆணைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் டொனால்டு ட்ரம்பின் உடனடி முன்னுரிமைகள் என்பது எல்லைப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புதல் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், பொறுப்புக்கு வரும் முதல் நாளில் குறைந்தது 25 நிர்வாக ஆணைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர் விவகாரம் தொடர்பில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, சட்டவிரோத புலம்பெயர் மக்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முதலில் தொடங்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டத்தில் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும், ஆனால் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 100,000 படுக்கைகளை ஒதுக்குவதற்காக தடுப்பு மையங்களுக்கு நிதியை அங்கீகரிக்க காங்கிரஸின் உதவியை நாட இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நாடுகளுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் பயணத் தடை விதிக்கவும் ட்ரம்ப் தயாராகி வருகிறார். அமெரிக்காவில் பிறப்பதால் கட்டாயக் குடியுரிமை என்ற திட்டத்தையும் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...