5 7
உலகம்செய்திகள்

உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் ட்ரம்ப்: அச்சத்தில் பிரான்ஸ்?

Share

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதலே, ட்ரம்ப் அடுத்து என்ன செய்வாரோ என உலக நாடுகள் பல பதற்றத்தில் உள்ளன.

அதற்கேற்றாற்போல, பதவியேற்றதுமே, கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது வரிகள் விதிப்பதாக அறிவித்தார் ட்ரம்ப்.

இந்நிலையில், அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

ஆக, இந்த விடயம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவுடனான உறவு மற்றும் ஐரோப்பாவின் ராணுவ செலவீனம் ஆகிய விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே பிரஸ்ஸல்ஸில் உச்சி மாநாடு ஒன்றை நடத்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடியது அதற்கு ஆதாரமாக உள்ளது எனலாம்.

குறிப்பாக, பிரான்ஸ் ட்ரம்ப் குறித்த அச்சத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

மாநாட்டுக்கு முன் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பேச்சில் அவரது அச்சம் வெளியானது எனலாம்.

உக்ரைன் ஊடுருவலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளும், ஐரோப்பாவை ஒற்றுமையாக இருக்கவேண்டும், தனது பாதுகாப்புக்கு, தானே பொறுப்பு எடுக்கவேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஆனால், விடயம் என்னவென்றால், ஐரோப்பிய தலைவர்களில் பலர் ட்ரம்பை எதிர்க்க தயங்குகிறார்கள்.

போலந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளின் தலைவர்கள், ட்ரம்புடன் மோதக்கூடாது, அமெரிக்காவுடன் நல்ல உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

ஜேர்மனியின் எதிர்க்கட்சிகளிடமும் இந்த கருத்தே நிலவுகிறது.

ஆக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பயப்பட வைத்துவிட்டார் ட்ரம்ப் என்றே தோன்றுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...