rtjy 17 scaled
உலகம்செய்திகள்

உக்கிரமடையும் காசா போர்க்களம்: பிரதிநிதியை சந்தித்த கனேடிய பிரதமர்

Share

உக்கிரமடையும் காசா போர்க்களம்: பிரதிநிதியை சந்தித்த கனேடிய பிரதமர்

தங்கள் உறவினர்களின் உரிமைகள், பாதுகாப்பது குறித்து கனடாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் கவலையுற்றுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 8,300 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போர் நிறுத்தம் செய்வதற்கான உலகளாவிய கோரிக்கைளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் உள்ள வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிக்கித் தவிப்பதாக ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்லாமியர் வெறுப்பு மனநிலையை எதிர்த்து போராடுவதற்கான கனடாவின் சிறப்புப் பிரதிநிதி அமிரா எல்காவாபியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அவருடன் உரையாடியது குறித்த புகைப்படத்தை பகிர்ந்த ட்ரூடோ அவரது பதிவில்,

‘கனேடிய முஸ்லீம்கள், அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் தங்கள் உறவினர்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறார்கள்.

நான் நேற்று அமிரா எல்காவாபியை சந்தித்தபோது இந்த அச்சங்கள் மற்றும் இஸ்லாமியர் வெறுப்பு மனநிலை மற்றும் அனைத்து வகையான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினோம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...