1200x627 1581604914808
உலகம்செய்திகள்

அதிவேகத்தில் டீக்கடைக்குள் புகுந்த லொறி! 5 ஐயப்ப பக்தர்கள் பலி

Share

தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் டீக்கடைக்குள் லொறி புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் 5 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது.

அரியலூரில் இருந்து வந்த அந்த லொறி நந்தனசமுத்திரம் அருகே வந்தபோது ஓட்டுனரை கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரம் இருந்த டீக்கடை ஒன்றில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் அருகில் இருந்த வேன் மற்றும் கார் மீதம் அந்த லொறி மோதியதில் ஐந்து பேர் பலியாகினர்.

அவர்கள் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் என்றும், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 பக்தர்கள் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...