லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்
உலகம்செய்திகள்

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

Share

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கு வயது 26. இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஹேமலதா, கிண்டியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பிபிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை பெரம்பூரில் உள்ள தன்னுடை தாய் வீட்டிற்கு ஹேமலதா தனது கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வந்து கொண்டிருந்த சிமெண்ட் கலவை லொறி இருச்சக்கரவாகனத்தின் மீது மோதியது.

இருச்சக்கரவாகனத்தின் மீது லொறி மோதியதில் ஹேமலதா கீழே விழுந்தார். அப்போது, ஹேமலதா தலையின் மீது லொறியின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில், ரகு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தை அறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிசார் உயிரிழந்த ஹேமலதாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் ஆசாத் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த தன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவர் அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...