titan sub near surface 1
உலகம்செய்திகள்

டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் எச்சரிக்கை

Share

டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பயணம் தொடர்பில் அமெரிக்க கடற்படை முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தது வெளியாகியுள்ளது.

OceanGate நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பலானது இதுவரை 14 முறை ஆழக்கடலில் சென்று திரும்பியுள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நீர்மூழ்கிக் கப்பல் போல் அல்லாமல், ஒரு கப்பலில் இருந்தே தொடர்புடைய நீர்மூழ்கிக் கப்பலை இயக்கவும் கட்டுப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தின் ஐவர் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புறப்பட்ட 45 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளின் சிறப்பு நிபுணர்கள் குழு தீவிரமாக தேடி வருகின்றனர்.

மட்டுமின்றி, அந்த கப்பலில் ஆக்ஸிஜன் சேமிப்பும் கரைந்து வருவதால், இனி சில மணி நேரம் மட்டுமே அந்த கப்பலை மீட்கும் அவகாசம் நிபுணர்கள் தரப்புக்கு உள்ளது எனவும் கூறுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே குறித்த கப்பலின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதும், இப்படியான ஒரு கப்பலில் ஆழக்கடல் பயணம் என்பது ஆபத்தில் முடியும் எனவும் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக கடற்பரப்பில் இருந்து அரை மைல் தொலைவுக்கு மட்டுமே கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் பயணிக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய ஆழத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது என்பது தற்கொலைக்கு ஒப்பானது என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் 24 மணி நேரத்திற்கான ஆக்ஸிஜன் மட்டுமே எஞ்சியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...