டயர்கள் இல்லாத கார்
உலகம்செய்திகள்

படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத கார்

Share

படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத கார்

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.

அந்த காரில் டயர்கள் கிடையாது. தரையில் பாம்பு போல ஊர்ந்து செல்லும் இந்த கார் உலகின் மிகச்சிறிய கார் என சமூக வலைத்தள பயனர்களால் அழைக்கப்டுகிறது. இந்த காரை உருவாக்கும் முழு செயல்முறையும் யூடியூப் சேனலான Carmagheddon-ல் காட்டப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது. காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும்.

ஆனால் கண்ணாடியின் கீழ் பகுதி, என்ஜின் இருக்கும் முன் பகுதி மற்றும் பொருட்கள் வைக்கப்படும் பின் பகுதி என அனைத்தும் காணவில்லை. மேலும் டயர் கூட இல்லாமல் இயங்கும் இந்த காரை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த கார் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிமைத்த வாலிபர்களுக்கு சமூக வலைத்தள பயனர்கள் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...