25 68480c1024e80 1
உலகம்செய்திகள்

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரில்வின் சில்வா

Share

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட ஒரு குழு சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.

இதன்போது சீனாவின் ஜெஜியாங் மாகாண ஆளுநர் லியு ஜீயுடனான சந்திப்பு முதலில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்பு சந்திப்பின் போது, ​​இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நட்புறவு குறித்து குறிப்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நிறைந்த ஆட்சியை மாற்றுவதற்காக ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்தும் திட்டத்துடன் முன்னேறி வருவதாக டில்வின் சில்வா சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகர, பிரதியமைச்சர் முனீர் முலஃபர், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...