8 26 scaled
உலகம்செய்திகள்

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

Share

தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை

ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் ஆறுதலடைந்ததாக ஒரு தந்தை கூறும் செய்தி, உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பயங்கர முகத்தை உலகம் கண்டுகொண்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் காட்டுமிராண்டித்தன தாக்குதல்களில் பலியான குழந்தைகளில் ஒன்று, அயர்லாந்தைச் சேர்ந்த தாமஸின் (Thomas Hand) குழந்தை.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என தான் கவலையில் இருந்தபோது, அவள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் கொல்லப்பட்டாள் என்ற செய்தி கேட்டு, நான் ஆறுதலடைந்தேன், புன்னகைக்கக் கூட செய்தேன் என்று கூறியுள்ளார் தாமஸ். தாமஸின் மகள் பெயர் எமிலி (Emily, 8).

நான் கேட்ட ஆறுதலளிக்கும் செய்தி அதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் தாமஸ். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பெண்களை என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், அது சாவை விட மோசமானது என்பது உங்களுக்குப் புரியும் என்கிறார் தாமஸ்.

அதாவது, தன் அழகான பெண் குழந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவின் கையில் சிக்கி, அவர்களால் சீரழிக்கப்படுவதைவிட, அவள் இறந்துவிட்டாள் என்று தனக்குக் கிடைத்த செய்தி தன்னை ஆறுதலடையச் செய்கிறது என்கிறார் தாமஸ்.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைகளையே விடாதவர்கள், குழந்தைகளின் கைகளைக் கட்டிவைத்து, தீவைத்துக் கொளுத்தி ரசிப்பவர்கள் கையில், தன் மகள் எமிலி சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த தாமஸுக்கு, அவளது மரணம் ஆறுதலையளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லையே!

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...