3 1 scaled
உலகம்செய்திகள்

128 ஆண்டுகளாக மம்மியாக பதப்படுத்திவைக்கப்பட்ட திருடனின் உடல் அடக்கம்

Share

128 ஆண்டுகளாக மம்மியாக பதப்படுத்திவைக்கப்பட்ட திருடனின் உடல் அடக்கம்

128 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு மனிதர் இப்போது அடக்கம் செய்யப்படுகிறார்.

நவம்பர் 19, 1895-ல் இறந்த அவர் வரும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7 (2023) அன்று தகனம் செய்யப்படுவார்.

உண்மையின் இறந்த நபர் ஒரு சிறு திருடன். சிறையில் இருந்தபோது சிறுநீரகக் கோளாறால் மரணமடைந்தார். ஆனால் அவர் தனது உண்மையான பெயரைக் கூறாததால் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க சிறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் அவரது விவரம் தெரியவில்லை

இதனால், இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாததால், சடலம் மம்மியாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அப்போதிருந்து, மம்மி பாதுகாப்பாக உள்ளது. அவரது சூட் மற்றும் டை இன்னும் அப்படியே உள்ளது. அவரது முடி மற்றும் பற்களும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா சிறையில் உயிரிழந்த திருடனின் உடலை அதிகாரிகள் மம்மியாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக, அமெரிக்காவின் சிறிய நகரமான ரீடிங்கில் கடந்த 128 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஸ்டோன்மேன் வில்லி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மம்மியின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா சிறையில் சிறுநீரக செயலிழப்பால் நவம்பர் 19, 1895 அன்று ஒரு திருடன் இறந்தான். அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க சிறைத்துறை அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரை சிறைக்கு கொண்டு வரும்போது பதிவான விவரங்களை வைத்து உறவினர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் விசாரணையில் திருடன் தனது பெயரைச் சொல்லாமல் வேறு பெயரைச் சூட்டியிருப்பது தெரிய வந்தது. அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

எனவே உடலை இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் சென்றனர். அரசு அனுமதியுடன் அங்கிருந்த ஊழியர்கள், அப்போது தங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவைக் கொண்டு இறந்த உடலை மம்மியாக மாற்றியுள்ளனர். அந்த மம்மி காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மம்மியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

சூட் மற்றும் ஷூ அணிந்திருந்த மம்மியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். 128 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மம்மியின் முடி மற்றும் பற்கள் அப்படியே உள்ளது. சில பண்டைய ஆவணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வில்லியின் ஐரிஷ் வேர்களை அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். ஆனால் மம்மியின் இறுதிச் சடங்குகளை அவர்களே செய்ய முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ரீடிங் வீதிகள் வழியாக மம்மியின் இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...