உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பல காயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்

Share

பிரித்தானியாவில் பல காயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்

பிரித்தானியாவின் பிளாக்பூல் பகுதியில் பெண் ஒருவர் பலதரப்பட்ட காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் பிளாக்பூல் பகுதியில் உள்ள ரெட்கார் சாலைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏற்பட்ட இறப்பு குறித்த நிகழ்விற்காக பொலிஸார் வியாழக்கிழமை 11 மணிக்கு முன்னதாக அழைக்கப்பட்டனர்.

அங்கு பலதரப்பட்ட காயங்களுடன் பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் தற்போது கொலை விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

அத்துடன் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பெண் அலிசன் டாட்ஸ்(Alison Dodds) என கண்டறியப்பட்டுள்ளது.

அலிசன் டாட்ஸ் மரணத்தை பொலிஸார் தற்போது சந்தேகத்திற்குரிய உயிரிழப்பாக கருதி இருப்பதுடன், சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக லங்காஷயர்(Lancashire) காவல் துறையின் துப்பறியும் தலைமை காவலர் ஜேன் வெவ் வழங்கிய தகவலில், முதலில் உயிரிழந்த அலிசன் டாட்ஸ் குடும்பத்தினருடன் எங்கள் ஆழ்ந்த எண்ணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் மோசமான இந்த நிகழ்வு குறித்து தங்களது விசாரணை குழு அவர் உயிரிழந்த இடத்தை சுற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...