2 18
உலகம்

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

Share

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

நில விவகாரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அரசு அதிகாரியை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானாவில், விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினும் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய கிராம மக்கள் கடைசியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தினர்.

பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்தில் ஏறி ஆட்சியர் கிளம்ப முயன்றார். அப்போது, அவர் ஏறிய வாகனத்தை கற்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆட்சியரின் வாகனம் சேதம் அடைந்தது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...