2 18
உலகம்

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

Share

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

நில விவகாரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அரசு அதிகாரியை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானாவில், விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினும் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய கிராம மக்கள் கடைசியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தினர்.

பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்தில் ஏறி ஆட்சியர் கிளம்ப முயன்றார். அப்போது, அவர் ஏறிய வாகனத்தை கற்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆட்சியரின் வாகனம் சேதம் அடைந்தது.

Share
தொடர்புடையது
mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...