2 18
உலகம்

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

Share

மாவட்ட ஆட்சியர் மீது தாக்குதல் நடத்திய கிராம மக்கள்.., பரபரப்பை கிளப்பிய வீடியோ

நில விவகாரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அரசு அதிகாரியை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானாவில், விகாராபாத் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயினும் கிராமத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய கிராம மக்கள் கடைசியில் வாக்குவாதத்தை ஏற்படுத்தினர்.

பின்னர், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால், கிராம மக்கள் அவரை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்திற்கு மேல் வாகனத்தில் ஏறி ஆட்சியர் கிளம்ப முயன்றார். அப்போது, அவர் ஏறிய வாகனத்தை கற்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் ஆட்சியரின் வாகனம் சேதம் அடைந்தது.

Share
தொடர்புடையது
NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff
செய்திகள்உலகம்

ஜப்பானில் திடீர் அரசியல் திருப்பம்: பாராளுமன்றம் கலைப்பு – பிப்ரவரி 8-இல் பொதுத்தேர்தல்!

ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி (Sanae Takaichi), அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ் சபையை (House of...

WhatsApp Image 2026 01 19 at 14.13.35
உலகம்செய்திகள்

சிலி நாட்டில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம்: 18 பேர் உயிரிழப்பு – 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்!

தென் அமெரிக்க நாடான சிலியில் (Chile) பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 18...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...