4 6 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

Share

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்ததில், 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் 240 பேர்களை பணயக்கைதியாகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் பதில் தாக்குதல் முன்னெடுப்பதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.

இந்த நிலையில் தான், அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூரமான செயல்களை செய்யவும் கொல்லவும் ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குண்டுவீச்சுகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி புறக்கணிக்கப்பட்ட அப்பாவி காஸா மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றங்கள் இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரைசி, இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படுகிறது என்றார்.

இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈராக் ஈரானுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது, இரு நாடுகளும் இதுவரை இஸ்ரேல் அரசாங்கத்தை அங்கீகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...