4 6 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

Share

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்ததில், 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் 240 பேர்களை பணயக்கைதியாகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் பதில் தாக்குதல் முன்னெடுப்பதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.

இந்த நிலையில் தான், அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூரமான செயல்களை செய்யவும் கொல்லவும் ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குண்டுவீச்சுகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி புறக்கணிக்கப்பட்ட அப்பாவி காஸா மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றங்கள் இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரைசி, இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படுகிறது என்றார்.

இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈராக் ஈரானுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது, இரு நாடுகளும் இதுவரை இஸ்ரேல் அரசாங்கத்தை அங்கீகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...