செய்திகள்உலகம்

பழிக்குப் பழி தீர்த்தது தலிபான்

app
Afghanistan
Share

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப் பேச்சாளரின், தாயாரின் நினைவேந்தல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

தாக்குதலில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குண்டுத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சில வாரங்களாக தலிபான்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலையும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

குண்டுத் தாக்குதலிற்கு பதிலடி வழங்கும் நோக்குடன், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் காபூலின் புறநகர் பகுதிக்குள் தலிபான்கள் அதிராடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான தாக்குதல் இடம்பெற்றதாக உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இத் தாக்குதலில் ஐ.எஸ் துருப்புக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை வெளிவரவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...