20 1
உலகம்செய்திகள்

4 வருடங்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி..!

Share

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகளில் முதல் முறையாக மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததன் மூலம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 6.68வீதமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், WTI மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 55.60 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு கட்டத்தில், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் விலை 6.34 வீதமாக குறைந்து 58.84 அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. உலகம் கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட 2021 – பெப்ரவரிக்குப் பிறகு, ஒரு பீப்பாய் 2021 எண்ணெயின் விலை 60 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்தது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்ததிலிருந்து, தொடர்ந்து ஐந்தாவது நாளாக எண்ணெய் விலைகள் கடுமையாக சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா கூடுதல் வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (09) மசகு எண்ணெயின் விலை சுமார் 7 வீதமாக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...