செய்திகள்உலகம்

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

130160
Share

கினியாவில் உதயமாகியது ராணுவ ஆட்சி! – அதிபர் சிறைப்பிடிப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

கினியா அதிபர் மாளிகை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அதிபர் ஆல்ஃபா கோண்டே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசமைப்பு சாசனம் இனி நடைமுறையில் இருக்காது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

கினியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய ராணுவத் தளபதி மமடி டோம்புயா,

நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.நாட்டை காப்பாற்றுவதே ஒரு ராணுவ வீரனின் கடமை. நாட்டில் தற்போது பதவியிலுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் பதவி நீக்கப்படுவார்கள். எமது ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் – என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த ராணுவப் புரட்சியை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ், துப்பாக்கிமுனையில் உருவாக்கப்படும் ஆட்சியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...