பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்
உலகம்செய்திகள்

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

Share

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்கு MH122 Airbus-a330 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் சக பயணிகளை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளா?’ எனக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

அவரது இந்த செயல் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானக் குழுவினர் சந்தேகமடைந்து அவரது பையை ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில் ஆபத்தான எதுவும் இல்லை என தெரிந்தது. எனினும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 4 மணிக்கு முன்னதாக விமானம் மீண்டும் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றின் முடிவில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து பயணிகள் இறங்கினர்.

சில பயணிகள் ஜெட் விமானத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் முகமது என்று கூறிக்கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...