19 16
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல்

Share

ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல்

யாஹ்வா சின்வாரின் மரணத்திற்கு பின்னர் ஹமாஸின் அடுத்த தலைவர் யார் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமைக்கு தகுதியானவர்களின் பெயர்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.

மேலும், காசாவில் கடந்த மாதம் 21ஆம் திகதி இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மற்றுமொரு தலைவரான சின்வார் பலியாகினார்.

இந்நிலையில் தலைவர்களை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு கடும் சவாலை விடுத்துள்ளது.

அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கட்டளைத்தளபதிகளில் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருகின்றார்.

இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கை என கூறப்படும் ஹமாஸ் துணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா காணப்படுகின்றார்.

கட்டாரில் இடம்பெற்ற அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவராக கலீல் அல் ஹய்யா கருதப்படுகின்றார்.

இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸீல் மற்றும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...