2 26 scaled
உலகம்செய்திகள்

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி

Share

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி

வட கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான ஆடம்பர ரிசார்ட் திறக்கப்படவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அந்நாட்டில் சுற்றுலா விசாக்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அதன் முக்கிய அங்கமாக, கிம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகிறார்.

இதற்காக பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படவுள்ள தெரிவிக்கின்றன.

வட கொரியா எனும் இந்த மர்மமான நாட்டிற்கு செல்ல எத்தனை பேர் விரும்புகிறார்கள் அல்லது அங்கு செல்வதற்கு தைரியமாக முன்வருவார்கள் என்பது வேறு விஷயம்.

கிம்மின் இந்த திட்டம் குறித்து பிரிட்டிஷ் செய்தித்தாள்களான TheSun மற்றும் US Time Post செய்திகளை வெளியிட்டுள்ளன. இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு வொன்சன் கல்மா பகுதியில் கிம் இந்த திட்டத்தை தொடங்கினார். இது வட கொரியாவின் மேற்கு கடல் கடற்கரை ஆகும்.

பின்னர் அதன் கட்டுமானமும் தொடங்கியது. இருப்பினும், இந்த நேரத்தில் கொரோனா காலம் வந்ததால், திட்டத்தை நிறுத்த வேண்டியிருந்தது.

இப்போது அதை விரைவில் முடிக்க கிம் உத்தரவிட்டுள்ளார், அவரே அதைக் கண்காணித்தும் வருகிறார்.

இதற்கிடையில், கடற்கரை ஓய்வு விடுதியில் Water Parks, Hotels, விமான நிலையங்கள் மற்றும் அனைத்து வகையான ஆடம்பர வசதிகளும் இருக்கும். ஓரிரு மாதங்களில் அது நிறைவடையும் என கூறப்படுகிறது.

வட கொரியாவை நெருக்கமாகப் புரிந்து கொண்ட பிரித்தானிய நிபுணர் மைக்கேல் மேடன் இது குறித்து கூறியுள்ளதாவது – “பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகமும் இந்த விடயத்தில் ஒரு கண் வைத்திருக்கும். சிறிது நேரம் கழித்து, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் இந்த ரிசார்ட்டை அனுபவிப்பதை காண முடியும். சுற்றுலாவை மேம்படுத்த வடகொரிய நிறுவனங்கள் சிறப்பு சுற்றுலா தொகுப்புகளை அறிவிக்கலாம்” என கூறியுள்ளார்.

இதையெல்லாம் மீறி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வட கொரியா மர்மமான நாடாக மட்டுமல்லாமல் ஆபத்தான நாடாகவும் கருதப்படுகிறது. தலைநகர் Pyongyang-ல் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது, இந்த நிலையில் நாட்டின் பிற பகுதிகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்பது தான் மிகப்பாரிய கேள்வி. சுற்றுலா பயணிகள் இங்கு சென்று சிறு சிறு விடயங்களுக்காக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

இத்திட்டத்தின் 90% பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு மொத்தம் 150 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கிம் உதவி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் வடகொரியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாக வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர் மைரா ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் உதவி இல்லாமல் இந்த நாடு வாழ முடியாது. அவர்களுக்கு முதலீடு தேவை. சீனாவும் ரஷ்யாவும் எப்போதும் உதவ முடியாது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...