அரசியல்உலகம்

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

Share

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

மொராக்கோவில் திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதியில் அலறியடித்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மொராக்கோ நாட்டின் மாரகெச் நகரில் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்ட 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 1404 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்டுள்ளதால் நிலநடுக்க பாதிப்புகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொராக்கோவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் குறுக்கிட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட பாடகர், இசைக் கலைஞர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட மக்கள் என பலர் மேடையை விட்டு வாசல் வழியாக தப்பியோடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

images 1 8
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள்: துப்பாக்கி உரிமம் மற்றும் போராட்டங்களுக்குக் கடும் தடை!

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில...

1712855747
செய்திகள்உலகம்

ஜப்பானின் அணு ஆயுத இலட்சியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் – வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்,...