OIP 9
உலகம்செய்திகள்

கனடாவில் கனேடியர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலை செய்தவர் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Share

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார்.

கனேடியரான நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஊடகமான The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த இருவரையும் பொலிசார் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...