OIP 9
உலகம்செய்திகள்

கனடாவில் கனேடியர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலை செய்தவர் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Share

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார்.

கனேடியரான நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஊடகமான The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த இருவரையும் பொலிசார் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...