download 29 1 1
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகாிப்பு!

Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 11,109 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,059, மகாராஷ்டிராவில் 1,152, டெல்லியில் 1,420 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,628 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 4,098 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், ராஜஸ்தானில் 3 பேர் உள்பட 21 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...