16887236639622 scaled
உலகம்செய்திகள்

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

Share

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

பிசாசை வழிபடுவதாக கூறும் ஒருவர், தனது மனையை கொன்று, அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மூளையை சாப்பிட்ட கணவன்
மெக்சிகோவில் மிகக் கொடூரமான குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னைத்தானே ‘பிசாசு வழிபாடு செய்பவர்’ என்று முத்திரை குத்திக்கொண்ட அந்த நபர் , தனது மனைவியைக் கொன்று, அவரது மண்டை ஓட்டை சாம்பல் கிண்ணமாகவும் (ashtray), அவரது மூளையை Tacos உணவாகவும் சாப்பிட்டுள்ளார்.

அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், மனைவியிடம் அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

அல்வாரோ (Alvaro) எனும் 32 வயதான அந்த நபர், ஜூலை 2 அன்று பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கட்டிடம் கட்டும் தொழிலாளியான அல்வாரோ, ஜூலை 29 அன்று, ஐந்து பிள்ளைகளுக்கு தாயான தனது மனைவி மரியா மான்செராட்டை (Maria Montserrat) கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்யும்போது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தி போதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது, ​​குற்றத்தைச் செய்ய பிசாசு தனக்கு உத்தரவிட்டதாக அல்வாரோ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளார். சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள சிற்றோடையில் வீசியுள்ளார், ​​மீதியை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோஸில் வைத்து சாப்பிட்டதாகவும், உடைந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சாம்பல் கிண்ணமாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மனைவியைக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரை அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...