16887236639622 scaled
உலகம்செய்திகள்

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

Share

மனைவியின் மூளையை சமைத்து சாப்பிட்ட கணவன்

பிசாசை வழிபடுவதாக கூறும் ஒருவர், தனது மனையை கொன்று, அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மூளையை சாப்பிட்ட கணவன்
மெக்சிகோவில் மிகக் கொடூரமான குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னைத்தானே ‘பிசாசு வழிபாடு செய்பவர்’ என்று முத்திரை குத்திக்கொண்ட அந்த நபர் , தனது மனைவியைக் கொன்று, அவரது மண்டை ஓட்டை சாம்பல் கிண்ணமாகவும் (ashtray), அவரது மூளையை Tacos உணவாகவும் சாப்பிட்டுள்ளார்.

அவர் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், மனைவியிடம் அடிக்கடி வன்முறையில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

அல்வாரோ (Alvaro) எனும் 32 வயதான அந்த நபர், ஜூலை 2 அன்று பியூப்லாவில் உள்ள தம்பதியரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கட்டிடம் கட்டும் தொழிலாளியான அல்வாரோ, ஜூலை 29 அன்று, ஐந்து பிள்ளைகளுக்கு தாயான தனது மனைவி மரியா மான்செராட்டை (Maria Montserrat) கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்யும்போது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தி போதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது, ​​குற்றத்தைச் செய்ய பிசாசு தனக்கு உத்தரவிட்டதாக அல்வாரோ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடல் உறுப்புகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளார். சில பைகளை வீட்டின் பின்புறமுள்ள சிற்றோடையில் வீசியுள்ளார், ​​மீதியை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோஸில் வைத்து சாப்பிட்டதாகவும், உடைந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதியை சாம்பல் கிண்ணமாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.

மனைவியைக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரை அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...