download 8 1
உலகம்செய்திகள்

பணத்திற்காக பேத்தியைக் கடத்திய தாத்தா!

Share

சீனாவில் சொந்தப் பேத்தியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65 வயது யுவான்சாய், பேத்தியை பிணைத்தொகையாக பிடித்து 500,000 யுவானுக்கும் அதிகமாக வழங்குமாறு கோரியுள்ளார்.

இதற்குமுன் அவர் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.

ஒருநாள் தமது 4 வயதுப் பேத்தியைப் பாலர் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றார் அவர்.

அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடாமல் தமது மகளை அழைத்து 3 நாள்களுக்குள் 500,000 யுவானைக் கொடுக்கவில்லை என்றால் பேத்தியை இனிமேல் பார்க்கவே முடியாது என்று மிரட்டினார்.

தன் தந்தையின் மிரட்டலுக்குப் பயந்து காவல்துறையைத் தொடர்புகொண்டார் அவரின் மகளாகும். பொலிஸ் அதிகாரிகள் யுவான்சாயைக் கைதுசெய்து குழந்தையை மீட்டெடுத்துள்ளனர்.

நடந்த சம்பவத்துக்குத் தன் மகள்தான் காரணம் என்றும் குடும்ப விவகாரத்தைச் சட்ட விவகாரமாக்கக் கூடாது என யுவான்சாய் கூறினார்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...