24 6603c45454802
உலகம்செய்திகள்

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

Share

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

தந்தை ஒருவர் தனது மகனிடம் தான் ஒரு கோடீஸ்வரர் என்பதை மறைத்து 20 ஆண்டுகளாக ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாங் யூடொங் ( Zhang Yudong). இவர் தனது மகன் ஜாங் ஜிலோங்கிடம் (Zhang Zilong) 20 ஆண்டுகளாக தான் ஒரு ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சமீபத்தில் மகன் ஜாங் ஜிலோங் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்த பேட்டியில், “எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர் என்பதே எனக்கு தெரியாது.

சாதாரண குடியிருப்பில் தான் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில் தான் நான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்றும், அந்நிறுவனம் கடனில் இயங்குகிறது என்றும் தந்தை கூறியிருந்தார்.

அதனால் கடனை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன். மேலும், படிக்கும் போதே மாதம் 6 ஆயிரம் யுவான் சம்பளத்திற்கு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சேர்ந்தேன். அந்த சம்பளத்தை வைத்து கடனை அடையுங்கள் என்று அபபாவிடம் கூறுவேன் .

பின்னர், நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் தங்களது பொருளாதார நிலையை பற்றியும், சொத்து விபரத்தையும் பற்றியும் எனது தந்தை தெரிவித்தார். அவர் அப்படி பொய் கூறியதால் தான் உழைப்பை பற்றி தெரிந்தது” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....