6 scaled
உலகம்செய்திகள்

4 லட்சம் அகதிகளை அதிரடியாக வெளியேற்றிய நாடு: நடவடிக்கை தொடரும் என அறிவிப்பு

Share

4 லட்சம் அகதிகளை அதிரடியாக வெளியேற்றிய நாடு: நடவடிக்கை தொடரும் என அறிவிப்பு

உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 4 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.

1979-1989 வரையிலான காலகட்டங்களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் அகதிகளாக பாகிஸ்தானுக்குள் குடியேறினர்.

பின் அடுத்தடுத்து நடந்த போர்களின் போது லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் பாகிஸ்தானுக்குள் அகதிகளாக குடியேறினர்.

இந்நிலையில் அண்மை காலங்களாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் தாக்குதலுக்கு அகதிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்கிடையில் உரிய ஆவணங்கள் இன்றி பாகிஸ்தானில் தங்கி இருக்கும் ஆப்கானியர்களை தங்களது சொந்த நாட்டிற்கு பாகிஸ்தான் திருப்பி அனுப்பி வருகிறது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி தொடர்பாளர் ஜபீஹூல்லா முஜாஹித் வழங்கிய தகவலில், இதுவரை 4 லட்சம் பேரை ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் திருப்பி அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிகாரிகள் இது தொடர்பாக தெரிவித்த தகவலில், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அனைவரையும் வெளியேற்றும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...