11 2
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி மீது வலதுசாரி கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு

Share

பிரான்ஸ் ஜனாதிபதி மீது வலதுசாரி கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு

பிரான்சில்(France) தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) தான் என தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென் (Marine Le Pen) குற்றஞ்சாட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தீவிர இடதுசாரிகள் கூட்டணியும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பொருட்டு போராடி வருகிறது.

இந்நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அது நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மேலும், கூட்டணி கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேக்ரான் கூட்டணி அல்லது இடதுசாரிகள் அணி எவ்வாறேனும் ஆட்சிக்கு வரும் என்றால், வலுவான நிலையில் இருக்கும் தீவிர வலதுசாரிகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னெடுக்க கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே நாட்டின் மொத்த நெருக்கடிக்கும் காரணம் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் என வலதுசாரித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டின் பிரதமர் எந்த நிலையில் இருந்து வருவார் என்பதை யாராலும் அறிய முடியாத நிலையில் இன்று நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டுக்காக என்ன கொள்கை பின்பற்றப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...