7 35
உலகம்செய்திகள்

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

Share

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) ஒரு நாளைக்கு 7 மணிநேரம் நடப்பதன் மூலம பணம் ஈட்டக் கூடிய ஒரு வேலையை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில், மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விடயங்களைச் செய்யப் பழக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு தயாரிக்கப்படும் குறித்த ரோபோக்களுக்கு, மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தருவதற்காக குறித்த வேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைக்கு இலங்கை மதிப்பின் படி சுமார் 01 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்சர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும் எனவும் அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...