7 35
உலகம்செய்திகள்

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

Share

இப்படியும் பணம் ஈட்ட முடியுமா..! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புதிய வேலை

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் (Elon Musk) பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) ஒரு நாளைக்கு 7 மணிநேரம் நடப்பதன் மூலம பணம் ஈட்டக் கூடிய ஒரு வேலையை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில், மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விடயங்களைச் செய்யப் பழக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு தயாரிக்கப்படும் குறித்த ரோபோக்களுக்கு, மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தருவதற்காக குறித்த வேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைக்கு இலங்கை மதிப்பின் படி சுமார் 01 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்சர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும் எனவும் அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...