உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளை நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்! பாகிஸ்தான் இராணுவம் பரபரப்பு அறிக்கை

Share
7 3 scaled
Share

பயங்கரவாதிகளை நரகத்திற்கு அனுப்பிவிட்டோம்! பாகிஸ்தான் இராணுவம் பரபரப்பு அறிக்கை

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்தின் மீது அதிக ஆயுதம் ஏந்திய 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதற்கு இராணுவத்தினர் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

அத்துடன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பயன்படுத்தப்படாமல் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களில் குறைந்தது 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், TTPயின் (தெஹ்ரீக்-இ-தலிபான்) துணை அமைப்பாக புதிதாக தோன்றியுள்ள TJP என்ற அமைப்பு விமானப்படை தளம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இடைக்கால பிரதமரான அன்வாருல் ஹக் கக்கர், ‘எங்கள் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த முயற்சியும் அசைக்க முடியாத எதிர்ப்பை சந்திக்கும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...